தமிழகத்தில் 50 சதவீத அரசு பேருந்துகள் இயக்கம்? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகளை 50 சதவீதம் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து முதல்வருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன்படி மே 24 முதல் ஜூன் 7 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு – பக்தர்கள் கவனத்திற்கு!
இதன்படி அனைத்து கடைகளும் மாலை 5 வரை திறக்கப்படும் எனவும், அரசு அலுவலகங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பொதுப்போக்குவரத்து இ-பதிவு முறை மூலமாக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரமாக குறைந்துள்ளது. அதனால் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம் – தவறாமல் படிங்க!
இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினுடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதில் தளர்வுகள் அமலில் உள்ள 27 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்குள் அரசு பேருந்து போக்குவரத்து சேவையினை 50 சதவீதம் அளவிற்கு தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.