தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காதவர்கள் மே 22 ஆம் தேதிக்குள் மனு அளிக்கலாம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் அளவிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் இவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிலவிய பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் நிபந்தனைகள் கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களில் 37 வகையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிஏ 4 வகை வைரஸ் தொற்று உறுதி!
இதனை அடிப்படையாக வைத்து தகுதி பெறுவோர், தகுதியற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏராளமானோர் தகுதி பெற்றோர் பட்டியலில் இருப்பதாக புகார்கள் எழுந்தது. அதனால் அரசு எவ்வித நிபந்தைகளும் இன்றி அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நகை அடகு வைத்தவர்கள் வலியுறுத்தி வந்தனர். தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெயர் பட்டியலில் இல்லாதோர் மனு தாக்கல் செய்யலாம் என்று தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காதவர்கள் தங்களது மேல்முறையீட்டு மனுக்களை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் மனு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் தள்ளுபடி பெற அரசு நிபந்தனைகளின்படி, தகுதியிருந்தும் பட்டியலில் இடம் பெறாதவா்கள் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை சரகத் துணைப் பதிவாளா்களிடம் எழுத்துப் பூா்வமாக தகுந்த ஆதாரத்துடன் தங்களது மேல்முறையீட்டு மனுக்களை மே 22 ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என்று இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.