தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிஏ 4 வகை வைரஸ் தொற்று உறுதி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு ஒமைக்ரான் பிஏ 4 வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமோ என்று பொது மக்கள் மத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அனைத்து வகையான தொழிற்துறைகளும் இயல்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த புதிய வகையான பிஏ 4 வைரஸ் தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
பிஏ 4 வகை வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இதுவரை இந்த வகை வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. அத்துடன் பிஏ 2 வகை வைரஸ் தொற்று பரவியுள்ள நாடுகளில் பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது என்று தகவல் அளித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் போது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.