தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை - சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை - சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

5 நாட்கள் விடுமுறை :

தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து கொரோனா 3 வது அலை தாக்கம் அதிகரித்தால் ஜனவரி 31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்த நிலையில் பள்ளி கல்லூரி மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால், மாணவர்களின் நேரடி கல்விமுறை பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து விட்டதாகவும் அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்தும், தமிழக முதல்வர் அண்மையில் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்!

இந்த உத்தரவு அடிப்படையில் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாள் அன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை என அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வகையில் தேர்தல் பணிகள் பல்வேறு விதிமுறைகள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகளில் வாக்குச்சாவடிகளை அமைக்கப்படுவதால், தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பிப்.14ம் தேதி நர்சரி முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குறைந்தபட்சம், 5 அல்லது 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த வகையில் வாக்கு எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மேலும் 23ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!