பிப்.14ம் தேதி நர்சரி முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் நர்சரி முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான அனைத்து பள்ளிகளும் பிப்ரவரி 14 முதல் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்களும் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 3ம் அலைத்தொற்றுக்கு மத்தியில் உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளையும் பிப்ரவரி 14 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசாங்கம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்களின் படி, நர்சரி முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, பள்ளிகள் அனைத்தும் பிப்ரவரி 14 முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு – 7வது ஊதிய கமிஷன் பரிந்துரை!
இப்போது உத்தரபிரதேச பள்ளிகளில் ஏற்கனவே சில மாணவர்களுக்கான ஆப்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஜூனியர் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. அதாவது, மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஊரடங்கில் இருந்து சில கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள அரசு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்போது பள்ளிகளை மீண்டுமாக திறக்கும் போது, அரசு வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிக்கு வருகை தரும் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதுடன் எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாகும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் போது அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – சம்பளத்துடன் விடுமுறை!
மேலும் அனைத்து பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கொரோனா உதவி மையங்களை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், உத்தரபிரதேச மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100% திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இனி உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.