தமிழகத்தில் 11ம் வகுப்பு தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 11ம் வகுப்பு துணை தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்க உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக ,மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது தேர்வு ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயமாக பொது தேர்வு நேரடி முறையில் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிப்.14ம் தேதி நர்சரி முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு!
இதனை தொடர்ந்து பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக திருப்புதல் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் இதனை பொது தேர்வு போல நடத்தப்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் 11ம் வகுப்பு துணை தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 11ம் வகுப்பு மாணவர்கள் எழுதிய அரியர் பாடங்களுக்கான துணை தேர்வின் மதிப்பெண் சான்றிதழ் வெளியிட உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு – 7வது ஊதிய கமிஷன் பரிந்துரை!
அதன்படி இந்த மதிப்பெண் சான்றிதழை வருகிற பிப்ரவரி 14ம் தேதி துணைத் தேர்வு எழுதிய தேர்வு மையங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டு வகுப்புக்கும் தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இரண்டு வகுப்புகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு 2 தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை ஒரே மதிப்பெண் பட்டியலில் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.