தமிழகத்தில் ஜன.14 பொங்கல் பண்டிகை – தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை!

0
தமிழகத்தில் ஜன.14 பொங்கல் பண்டிகை - தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை!
தமிழகத்தில் ஜன.14 பொங்கல் பண்டிகை - தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை!
தமிழகத்தில் ஜன.14 பொங்கல் பண்டிகை – தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 5,000 மேற்பட்ட பனியன் நிறுவனங்களுக்கு 5 நாட்களுக்கு மேல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும் முதல் நாள் சூரியனை வழிபடும் திருநாள், இரண்டாம் நாள் உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளை போற்றும் மாட்டு பொங்கல் கொண்டாடப்படும். அன்றைய தினம் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டும் நடைபெறும். மூன்றாம் நாள் நமது சொந்தங்களுடன் நேரம் செலவிடும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து, பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி – ஆளுநர் அறிவிப்பு!

மேலும் பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகையும் கொண்டாடப்படும். இப்பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர். மற்ற ஆண்டுகளை தொடர்ந்து 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது. மக்கள் பண்டிகைக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டனர். கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பனியன் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – பேருந்து நிலையங்கள் விபரம்!

திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதில் வெளி மாவட்ட மற்றும் மாநில தொழிலாளர்கள் என 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜன.13 போகி பண்டிகை, ஜன.14 பொங்கல், ஜன.15 மாட்டுப்பொங்கல், ஜன.16 உழவர் திருநாள் ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 17ம் தேதி பஞ்சு, நூல் விலையை கண்டித்து பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதனால் 17ம் தேதியும் ஆலைகள் இயங்காது. இதனால் தொழிலாளர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!