ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து, பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி – ஆளுநர் அறிவிப்பு!
தமிழகத்தை பின்பற்றி நடக்கும் புதுச்சேரி அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தளர்வுகளை அறிவித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொங்கல் கொண்டாட தடை இல்லை:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா தொற்று மற்ற வகை கொரோனாவை விட வேகமாக பரவும் வகையில் வீரியம் மிக்கதாக இருந்து வருகிறது. அதனால் நாடு முழுவதும் மாநில வாரியாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு – பேருந்து நிலையங்கள் விபரம்!
அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அனைத்து விதமான நிறுவனங்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்டவைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றி நடக்கும் புதுச்சேரி அரசும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் வைகுண்ட ஏகாதேசி அன்று மட்டும் இரவுநேர ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் மினி ஊரடங்கு, ஜன.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் அறிவிப்பு!
இந்நிலையில் வரும் ஜன.14ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை கொண்டாட எவ்வித தடையும் இல்லை என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்றாலும் மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.