மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை? கணக்கீடு விவரங்கள் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதத்திற்கான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அமைச்சரவை செயலாளருடன் விரைவில் விவாதம் நடைபெற்ற இருக்கும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

DA நிலுவைத்தொகை

மத்திய அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி (DA) என்ற கூடுதல் சலுகையானது கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட 20 மாதங்களாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு ஊழியர்களுக்கான DA தொகை 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகை எப்போதும் கிடைக்கும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஜன.14 பொங்கல் பண்டிகை – தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை!

ஆனால் ஊழியர்களின் 18 மாத நிலுவைத் தொகை குறித்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. என்றாலும் DA நிலுவைத்தொகையை வழங்குவது குறித்து மத்திய அரசு இந்த மாதம் முடிவு எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 18 மாத DA நிலுவைத் தொகைக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் வரவு வைக்கப்படும், அதன் கணக்கீட்டு விவரக்ள என்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் தேசிய கவுன்சில் (JCM) செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், DA தொகையை மீட்டெடுக்கும் போது ஒரே முறையில் மொத்த பணத்தையும் செட்டில்மென்ட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் அரசாங்கத்தின் முன் வைத்துள்ளது என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து JCM, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, தேசிய கவுன்சில் மற்றும் நிதி அமைச்சருக்கு இடையே நிலுவைத் தொகை குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும் உறுதியான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் ஊழியர்களின் கோரிக்கை இன்னும் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் அரசுடன் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. எவ்வாறாயினும், விரைவில் இது குறித்து அமைச்சரவை செயலாளருடன் கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் செலவினத் துறையின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் மொத்தம் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், சுமார் 60 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இப்போது JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, நிலை-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது.

அதேசமயம், லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900) அல்லது நிலை-14 (ஊதிய அளவு) ஊழியரின் DA நிலுவைத் தொகை ரூ. 1,44,200 முதல் ரூ. 2,18,200 வரை செலுத்தப்படும் என்று தெரிகிறது. உண்மையில், நிலை 1 ஊழியர்களின் அகவிலைப்படி ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. அதே நேரத்தில், நிலை 13 ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை இருக்கும். மேலும் நிலை 14 ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவையாக ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.

  • இதில் குறைந்தபட்ச தர ஊதியம் ரூ. 800 உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ரூ.4320 வரை [{18000 இல் 4 சதவீதம்} X 6] பெறக்கூடும்.
  • அதே நேரத்தில், [{4 சதவீதம் 56900}X6] ரூ.13,656 பெறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
  • 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச தர ஊதியத்தில் 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை ரூ.3,240 [{3 சதவீதம் 18,000}x6] DA நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.
  • அதே நேரத்தில், [{3 சதவீதம் ரூ. 56,9003}x6] உள்ளவர்களுக்கு ரூ.10,242 கிடைக்கும்.
    தொடர்ந்து ஜனவரி மற்றும் ஜூலை 2021 க்கு இடைப்பட்ட DA நிலுவைத் தொகையைக் கணக்கிட்டால், அது ரூ.4,320 [{4 சதவீதம் ரூபாய் 18,000}x6] ஆக இருக்கும்.
  • அதே நேரத்தில், [{4 சதவீதம் ₹56,900}x6] ரூ.13,656 ஆக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!