5 கோடி தடுப்பூசி டோஸ்கள் ஜூன் 15 வரை இலவசம் – மத்திய அரசு அறிவிப்பு!!
தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் மே 1 முதல் ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை அனைத்து மாநிலங்களுக்கும் 5 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இலவச தடுப்பூசி
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதன் அடிப்படையில் ஜனவரி 16 முதல் கொரோனா முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதர பணியாளர்கள் அனைவருக்கும் முதல்கட்டமாகவும், இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. தமிழகத்தில் நாளை (மே 20) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டமாக செலுத்தப்பட உள்ளது.
1 முதல் 4ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
சில மாநிலங்களில் இதற்கு முன்னதாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாநிலங்கள் தோறும் செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளை, மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து அதை மாநிலங்கள் தோறும் விநியோகித்து வருகிறது. இந்த நிலையில் மே 1 முதல் ஜூன் 15 வரை அனைத்து மாநிலங்களுக்கும் 5 கோடி தடுப்பூசி டோஸ்களை இலவசமாக வழங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தவிர ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இருந்து நேரடியாக 4.87 கோடி தடுப்பு மருந்துகள் கிடைக்கிறது. மேலும் மத்திய அரசு தரும் இந்த இலவச டோஸ்களை, மாவட்ட வாரியாக மையங்கள் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தப்படும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் கோவின் செயலி மற்றும் இணையதளம் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை உருவாக்க வேண்டும். இதற்கான கால அட்டவணையை அனைத்து மாநில அரசுகளும், தனியார் தடுப்பூசி மையங்களும் கோவின் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பொது மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் கடிதம் வழியாக விரிவான தகவல் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.