தமிழகத்தில் தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் விற்பனையாகும் அளவிற்கு மட்டுமே சிலிண்டர் தர வேண்டும் என இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை:.
ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஒரு அங்கமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து சென்னை மண்டல எரிவாயு நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அதிகம் விற்பனை ஆகாத 5 கிலோ, 2 கிலோ எடையில் டெபாசிட் கட்டி வாங்கும் வகையிலும், காலி சிலிண்டர் கொடுத்து முழு சிலிண்டர்கள் வழங்கும் வகையிலும் விற்பனை அளவை விட 10 மடங்கு அதிகம் வழங்கி வருகிறார்கள்.
TVS Motor வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் கிளைகள் ஒவ்வொன்றிலும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான தொகை முடங்கிப்போய் உள்ளது. தினசரி 10 முதல் 15 சிலிண்டர்களே விற்பனையாகும் நிலையில் 300க்கும் மேற்பட்ட 5, 2 கிலோ சிலிண்டர்கள் முடங்கி உள்ளது. இதனால் வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்கள் வழங்குவதில் கவனம் சிதறி போகிறது. எனவே விற்பனையாகும் அளவிற்கு மட்டுமே 5 கிலோ, 2 கிலோ சிலிண்டர் தர வேண்டும் என தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் எரிவாயு அமைப்பாளர் கூறியுள்ளார்.