தமிழக அரசில் 4308 காலிப்பணியிடங்கள் – அக்டோபரில் நிரப்பப்படும் || அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக அரசில் 4308 காலிப்பணியிடங்கள் - அக்டோபரில் நிரப்பப்படும் || அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசில் 4308 காலிப்பணியிடங்கள் - அக்டோபரில் நிரப்பப்படும் || அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசில் 4308 காலிப்பணியிடங்கள் – அக்டோபரில் நிரப்பப்படும் || அமைச்சர் அறிவிப்பு!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட 4,308 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

தருமபுரி மாவட்டத்தில், உள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், செவிலியா் குடியிருப்புகள் உள்பட 14 புதிய கட்டடங்களை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து மருத்துவ பணியிடத்தில் பணியிடங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் தமிழகத்தில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பல்வேறு நிலைகளில் 237 பேருக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் மாத இறுதிக்குள் 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.

இந்த Feature உங்க வாட்ஸ் அப்பில் இருந்தா நீங்களும் மாஸ் தான்.. புத்தம் புதிய அப்டேட் – நெட்டிசன்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download

தமிழக அரசு மருத்துவமனைகளில் இதுவரை பணியாளர்கள் பற்றாக்குறை இன்றி செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ கடைகளில் தற்கொலைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்கொலை பயன்படுத்தப்படும் பொருட்களை வெளியில் தெரியும் விதமாக வைக்க கூடாது. தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு தற்கொலைக்கு ஆதாரமான பொருட்களான சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் தரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!