தமிழக ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கிட்டதட்ட 4000 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. 8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே ரேஷன் கடைகளில் பணியாற்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அதாவது அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான பல அன்றாட தேவை பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) பயன்படுத்தி 69 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். அதாவது இந்த ரேஷன் கடைகள் வாயிலாக 6,82,12,884 நபர்கள் இந்த அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மொபைல் எண் அப்டேட்! IPPB முக்கிய அறிவிப்பு!
ஏற்கனவே இந்த ரேஷன் கடைகளில் சேர்வதற்கான அறிவிப்புகள் வெளியாகியது. இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சில அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டு முறைகேடுகளில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் கடைகளில் யாரையும் பணியமர்த்தாமல் பாதியிலேயே விடப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளனர்.
கடலூர் சிதம்பரம் கோயிலில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை – வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு!
அதன்படி ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களுக்கு 4000 காலிப்பணியிடங்கள் இருப்பதால் தற்போது ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது. விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களுக்கு நேர்காணல் மூலமாக பணியில் அமர்த்தவுள்ளனர். விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். 8 ஆம் வகுப்பு படித்தவர்களில் இருந்து எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.