டாடா நிறுவனத்தில் 400 பேருக்கு வேலை – பொறியியல் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!!
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் டாடா குழுமம் தற்போது நடப்பு நிதியாண்டில் 400 பேருக்கான வேலைவாய்ப்பை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா நிறுவன பணி:
நாட்டின் வணிக துறையில் டாடா நிறுவனம் மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. பல முக்கிய துறைகளில் தனது ஆளுமையை செலுத்தி வரும் டாடா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டிலும் தனது இலக்குகளை உயர்த்திக் கொண்டே செல்கிறது. மேலும், அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில், கொள்முதல் மற்றும் கட்டுமான பிரிவாக உள்ள டாடா ப்ராஜெக்ட்ஸ் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
புயலால் சேதமடைந்த படகுகள் – இழப்பீடு வழங்க கோரி வழக்கு… உயர்நீதிமன்ற மதுரை கிளையின் புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
அதன்படி, நடப்பு நிதியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் இருந்து 400 பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு அளிக்க உள்ளது. இந்த எண்ணிக்கையில் ஐஐடி மற்றும் என்ஐடி கல்லூரிகளில் இருந்து 255 பேர், மீதம் உள்ளவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையினை தங்கள் நிறுவனத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும், ஆண்டிற்கு ரூ.17 லட்சம் வரை பொறியியல் துறை பணியாளர்களுக்கு அந்நிறுவனம் ஊதியமாக அளித்து வருகிறது.