சென்னை முழுவதும் 26ம் தேதி 400 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி வரும் 26ம் தேதி 400 சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி என்பதால், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆயத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தடுப்பூசியை முறையாக பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் உள்ளது. இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றம் குறித்து ரஷ்ய அதிபருடன் பேச்சு வார்த்தை – பிரதமர் மோடி!
அதில், சென்னையில் ஆகஸ்ட் 23ம் தேதியான நேற்று வரை 25,72,540 முதல் தவணை தடுப்பூசிகள், 11,07,473 இரண்டாம் தவணை தடுப்பூசிகள்செலுத்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1,409 பேருக்கு அரசின் திட்டப்படி, வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை செயல்படுத்தும் வகையில், 26.08.2021 அன்று மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டுக்கு 2 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் என, மொத்தம் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்கள் என்று அனைத்து தரப்பினரும் கண்டறியப்பட்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஆகஸ்ட் 26ம் தேதி அன்று நடக்கும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொல்லப்படுகின்றனர். சிறப்பு முகாம் தொடர்பான விவரங்களை மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/mega_camp/ என்ற இணையதளதின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.