ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றம் குறித்து ரஷ்ய அதிபருடன் பேச்சு வார்த்தை – பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி மாறியுள்ள நிலையில், இது குறித்து ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தை:
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை முழுவதுமாக தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இவர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு பயந்து மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தாலிபான்களின் ஆட்சியை விரும்பாத அந்நாட்டு மக்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற துடிக்கின்றனர். மற்ற நாடுகளை சேர்ந்த மக்கள் ஆப்கனை விட்டு வெளியேற இந்த மாதம் இறுதி தேதி வரை தாலிபான்கள் கேடு நிர்ணயித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றம் குறித்து ரஷ்ய அதிபருடன் பேச்சு வார்த்தை – பிரதமர் மோடி!
இதனால் அனைத்து நாட்டு அரசுகளும் ஆப்கானில் உள்ள தங்கள் நாட்டினரை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணியினை செய்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உட்பட 21 நாடுகள் இணைந்து கூட்டாக ஆப்கான் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை குறித்து மிகவும் கவலை கொள்கிறோம். ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஆப்கனின் நிலை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இருவரும் இணைந்து இன்று தொலைபேசியில் 45 நிமிடங்களுக்கும் மேல் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவீட்டரில், கொரோனா பேரிடருக்கு எதிரான போரில் இணைந்து செயல்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்தார். மேலும், உலகின் முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களை பற்றியும் இரு நாடுகளும் கலந்தோசிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.