Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!

0
Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் - சூப்பர் சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் - சூப்பர் சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!

Post Office மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை நபர் ஒருவர் தொடங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது மற்றும் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு முதிர்வு தொகை கிடைக்கும் என முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி:

உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் அதிக அளவில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் வங்கிகளுக்கு இணையாக தபால் நிலையங்களில் அதிக சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் தபால் நிலையங்களில் மக்களால் அதிகம் வரவேற்பு பெற்ற சிறுசேமிப்பு திட்டங்கள், டைம் டெபாசிட் திட்டம், ரெக்கரிங் டெபாசிட், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் திட்டங்கள் ஆகும். இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் ரிஸ்க் இல்லாமல் அதிக பாதுகாப்பு உள்ள திட்டங்கள் ஆகும்.

தமிழகத்தில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் தீவிர ஆலோசனை!

அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம், குறைந்த அளவு முதலீடு செய்து அதிக அளவு முதிர்வு தொகையை ஈட்டலாம். இத்திட்டத்தை சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். இத்திட்டம் தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள் அடையாள சான்று, முகவரி சான்று, பான் கார்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பதிவு படிவம் E ஆகும். இத்திட்டத்தில் நபர் ஒருவர் தினமும் 417 ரூபாய் சேமித்து முதலீடு செய்து 40 லட்சம் ரூபாய் வரை முதிர்வுத் தொகையை பெறலாம். இந்த வகையில் தினமும் 417 ரூபாய் என்றால் மாதம் 12500 ரூபாய் ஆகும். இந்த 12500 ரூபாய் ஒரு ஆண்டுக்கு மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!

இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதன்படி 15 ஆண்டுகளுக்கு மொத்தம் 22.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம். இந்த திட்டத்துக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. எனவே மெச்சூரிட்டி காலம் வைத்து கணக்கிடுவதில், வட்டி மட்டுமே 18.18 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. அதன்படி மெச்சூரிட்டியின் போது மொத்தமாக கிடைக்கும் தொகை 40.68 லட்சம் ரூபாய் ஆகும். இதன் அடிப்படையில் முதிர்ச்சி காலத்துடன் 5 ஆண்டுகள் கூடுதலாக ஒன்றரை லட்சம் ஆண்டுதோறும் முதலீடு செய்தால், முதலீடு செய்த மொத்த தொகை 37.50 லட்சமாக இருக்கும். இதற்கு 7.1 % வட்டி தொகையுடன் கணக்கிட்டால், 65.68 லட்சம் ரூபாய் கிடைத்திடும். அந்த வகையில், கூடுதலாக 5 ஆண்டுகள் என மொத்த 25 ஆண்டு முதலீடு செய்தால் முதிர்வு தொகை 1.03 கோடி ரூபாய் கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!