தமிழகத்தில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் தீவிர ஆலோசனை!

0
தமிழகத்தில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் இதுவரை வந்த கொரோனா அலைகளை விட தற்போது பரவி வரும் மூன்றால் அலையால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு அமல்:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு வந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் ஓமிக்ரான் தொற்று பரவ தொடங்கியது.

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!

அதனால் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகத்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்பதால் அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறுகிழமை ஊரடங்கை அமல்படுத்தியது. ஆனாலும் அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 17800 க்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்கனவே அமலில் இருக்கும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமலில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!

மேலும் பொங்கல் பண்டிகை காரணமாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேம்படுத்துவது, ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்துவது, ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகரித்தல், ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் பொங்கல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு குறைவான பார்வையாளர்களுடன் அனுமதி, பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது, மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, பள்ளிகளுக்கு சுழற்சி முறை வகுப்பு, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிப்பு, கடைகளின் நேரம் குறைப்பு, வழிபாட்டுத் தலங்களில் மேலும் கட்டுப்பாடு போன்ற அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!