தமிழக ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்கள் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
தமிழக ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்கள் - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்கள் - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் 4000 காலிப்பணியிடங்கள் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது அதிகமான அளவு காலிப்பணியிடங்கள் உள்ளதால் ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் உள்ளிட்ட பணியிடத்தில் இருக்கும் 4000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை அறிவிக்க உள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளின் மூலமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது 25 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர் பற்றாக்குறை உள்ளதால் ஒரு ஊழியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளை கண்காணிக்க வேண்டியுள்ளது. அதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக கடந்த ஆண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அரசு விளக்கம்!

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 அல்லது 300 பணியிடங்களை நிரப்ப நேர்காணல் நடத்தப்பட்டது. மேலும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. இதில் குறிப்பாக அரசியல்வாதிகள் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்ச வரை வசூலித்தனர். மேலும் இது போன்ற பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாக புகார் பெறப்பட்டது. அதனால் நேர்காணல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதற்கான தகுதியான நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பட்டியல் பெறப்பட்டு அதன்பின் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசு தெரிவித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி (DA) உயர்வு குறித்து நாளை அறிவிப்பு?

இதையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர் பணியிடத்தில் இருக்கும் 3331 காலிப்பணியிடமும், எடையாளர் பதவியில் 666 காலிப்பணியிடமும் நிரப்ப உள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது, இந்த முறை ரேஷன் கடை ஊழியர்களுக்கான தேர்வு வெளிப்படையாக நடத்தப்படும் என்றும் இதற்காக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!