தமிழகத்தில் 4,308 அரசு மருத்துவ காலிப்பணியிடங்கள்? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் 4,308 அரசு மருத்துவ காலிப்பணியிடங்கள்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 4,308 அரசு மருத்துவ காலிப்பணியிடங்கள்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 4,308 அரசு மருத்துவ காலிப்பணியிடங்கள்? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் அரசு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது. இதையடுத்து மருத்துவ துறையில் உள்ள செவிலியர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. அதனால் தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சையில் மாநகராட்சி பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து இவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 94.68% பேருக்கும், 2ம் தவணை தடுப்பூசி 85.47% பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பயன்பாட்டால் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள்? பள்ளிகளின் அதிர்ச்சி முடிவு!

தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிஏ4, பிஏ5 உள்ளிட்ட உருமாறிய கொரோனா தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் 40% மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மட்டுமே ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவ துறையில் உள்ள செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்றும் அத்துடன் 4,308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!