தமிழகத்தில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு:
தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு உலகத்திலேயே நடக்கும் மிகப்பெரிய நுழைவுத் தேர்வாகும். ஆண்டுதோறும் 16 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக நீட் நுழைவுத் தேர்வு நடப்பாண்டில் வழக்கத்தை விட தாமதமாக நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஜூலை 19க்கு பின்னர் ஊரடங்கு தளர்வுகள்? முதல்வர் நாளை ஆலோசனை!
நடப்பு ஆண்டில் நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடக்க இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை 13ம் தேதி மாலை 5 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் என்டிஏ அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் இதுவரை 14 நீட் தேர்வு மையங்கள் உள்ள நிலையில் கூடுதலாக செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 4 முக்கிய நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்க இருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். மேலும் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.