தமிழகத்தில் ஜூலை 19க்கு பின்னர் ஊரடங்கு தளர்வுகள்? முதல்வர் நாளை ஆலோசனை!
கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜூலை 19 க்கு பின்னர் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஜூலை 16) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து ஏறத்தாழ அனைத்து வகையான சேவைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு மற்ற அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நாளொன்றுக்கு 35 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்டு வந்த புதிய கொரோனா பாதிப்புகளானது, ஜூன் மாத துவக்கத்தில் இருந்து சரிய ஆரம்பித்தது.
இதை தொடர்ந்து மாநிலம் தழுவிய பொது முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக தளர்வுகள் கொடுக்கப்பட்டது. இதில் இறுதியாக கடந்த 2 வாரங்களுக்கு முன்னாக தொடங்கி பேருந்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, இ-பதிவு நடைமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் 50% இருக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் பலவிதமான செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், இன்னும் பள்ளி, கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி, திரையங்குகள் திறப்பு போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து ஜூலை 19 க்கு பின்னர் தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (ஜூலை 16) காலை 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். அதாவது சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை மற்றும் வருவாய் துறை செயலாளர்கள் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் முழு ஊரடங்கு தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பின்னாக முழு ஊரடங்கில் இருந்து மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.