மார்ச் 17 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
மார்ச் 17 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மார்ச் 17 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மார்ச் 17 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி கொண்டிருக்கும் தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகளுக்கு ஹோலிப்பண்டிகை காரணமாக தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கான தெளிவான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தான் முறைப்படி வழங்கி வருகிறது. இந்த மார்ச் மாதத்தில் மட்டுமே 4 ஞாயிற்றுக்கிழமை உட்பட 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி விடுமுறை தினங்களில் கூட ஆன்லைன் பேங்கிங் சேவைகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் போன்றவை வழக்கம் போல தொடர்ந்து செயல்படும். ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் ஏற்கனவே வெளியிட்டது. அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப விடுமுறை தினங்கள் மாறும்.

PF கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி அறிவிப்பு – வட்டி விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைப்பு!

தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரம் தொடர்ந்து அதாவது மார்ச் 17, 18, 19, 20 ஆகிய நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திடீரென நீங்கள் வங்கிகளுக்கு செல்ல நேரிட்டால் எந்த மாநிலத்திற்கு ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு தெரிந்த பின்பு வங்கிகளுக்கு செல்லவும். எந்தெந்த மாநிலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கான பட்டியலை இங்கு பார்ப்போம்.

  • 17-03-2022 வியாழக்கிழமை – டெஹ்ராடூன், கான்பூர், லக்னோ, ராஞ்சியில் வங்கிகள் மூடப்படும்.
  • 18-03-2022 வெள்ளிக்கிழமை – அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • 19-03-2022 சனிக்கிழமை – புவனேஸ்வர், இம்பால், பாட்னாவில் வங்கிகள் மூடப்படும்.
  • 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை – வங்கி விடுமுறை.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!