தமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் – தலைமை செயலர் உத்தரவு!!
தமிழகத்தில் இன்று புதிதாக 39 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமை செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிகாரிகள் மாற்றம்:
தமிழகத்தில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து பல துறைகளின் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்னர் நடந்துள்ள ஆட்சி மாற்றத்திற்கு பிறகு புதிய முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். முதல்வராக பதவி ஏற்ற பிறகு தமிழக அரசின் துறைகளில் பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். முன்னதாக முக்கிய அரசு துறைகளின் பெயர்களை மாற்றம் செய்து அறிவித்தார்.
3 வாரங்களில் 2,100 பேர் பலி – அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு !!
இதன் பிறகு பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்றும் பல மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது குறித்த அரசாணையில், திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த பி.சங்கர் காதி கைவினைப் பொருள் ஆணைய சி.இ.ஓ.வாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
தமிழ்நாடு கோ – ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனராக டி.பி.ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோல் பேரூராட்சி இயக்குனர் எஸ்.பழனிசாமி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதுபோல் மொத்தம் 39 அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.