3 வாரங்களில் 2,100 பேர் பலி – அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு !!
நாட்டில் கடந்த 3 வாரங்களில் கருப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை:
கொரோனா தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் அதிக வேகத்தில் பரவி வந்த சமயத்தில் அதன் பாதிப்புகள் அனைவரையும் அதிர்வடைய செய்தது. வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரண்டாவது அலை கடந்த மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கியது. தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுடன் இணைந்து கருப்பு பூஞ்சை என்ற புதிய நோயும் மக்களை பாதிக்க தொடங்கியது.
சாலையோர விலங்குகளுக்கு உணவளிக்க அரசு நிதி ஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் பாராட்டு!
கருப்பு பூஞ்சை நோயானது கொரோனா தொற்றின் இருந்து மீண்டவர்களையே அதிக அளவில் பாதிப்பதாக கண்டறியப்பட்டது. மேலும், இந்த நோயினால் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வந்தது. நாடு முழுவதும் இதுவரை 31,216 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 3 வாரங்களில் மட்டும் 2,109 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150% உயர்ந்திருந்தது.
TN Job “FB Group” Join Now
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு உதவும் Amphotericin-B என்ற மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 7,057 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 609 உயிரிழப்புகளும் அங்கு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தபடியாக குஜராத்தில் 5418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 323 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயின் போது சிகிச்சைக்கு அளிக்கப்படும் வீரியம் மிக்க மருந்துகளின் காரணமாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.