தமிழக அரசு வழங்கும் ரூ.3500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் தமிழ் பணியாற்றிய வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் 3,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை:
தமிழகத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழறிஞர்களின் பணி இன்றியமையாததாகும். மொழி வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் புதிய படைப்புகளை வெளியிடுகின்றனர். இவர்களின் படைப்புகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் போற்றப்படுகிறது. இவர்கள் மொழியின் மீது தீராத பற்றுடையவர்களாக உள்ளனர். இந்த மொழி ஆர்வத்தால் ஓயாது உழைத்து வருகின்றனர். மேலும் தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதை தான் முதல் பணியாக செய்து வருகின்றனர்.
Airtel, Jio மற்றும் Vi ன் ரூ.500 க்கு குறைவான ப்ரீபெய்ட் திட்டங்கள் – சலுகைகள் விளக்கம்!
இந்த தமிழறிஞர்களின் முதுமை காலத்தில் உதவும் வகையில் அரசு சார்பாக மாதந்தோறும் ரூ.3,500 உதவித்தொகை, மருத்துவ படி ரூ.500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான அறிவிப்புகள் வெளியிப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழறிஞர்கள் முதுமை காலத்தில் பிறரது எதிர்பார்ப்பின்றி வாழ அரசு வழிவகை செய்கிறது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் வயது 1.01.2021 அன்று 58 நிறைவு பெற்றிருக்க வேண்டும். தமிழ் பணி ஆற்றியதற்கான சான்றை தமிழாசிரியர்கள் 2 பேரிடம் இருந்து பெற வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். தகுதி உடையோர் இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை முழுமையாக பூர்த்தி செய்து ஆக.31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.