தமிழகத்தில் நலிந்த கலைஞர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை – முதல்வர் துவக்கி வைப்பு!
கொரோனா ஊரடங்கினால் தங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நலிவடைந்த இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கலைஞர்களுக்கு உதவித்தொகை:
தமிழ் பண்பாட்டில் இயல், இசை, நாடகம் போன்ற கலைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பழங்காலத்தில் நாடக கலைஞர்கள் தெருக்கூத்துகள் மூலம் தங்கள் கலை திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டினார். ஒரு திருவிழா என்றால் நாடகங்கள் இல்லாமல் இருக்காது. கூடவே இன்னிசையும் இருக்கும். இந்த கலைஞர்கள் தங்கள் நடிப்பு & பாடல்கள் மூலமும் பொதுமக்களை மகிழ்விப்பர். இதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. நாகரிகம் வளர வளர இது போன்ற பண்பாட்டு கலைகள் காலத்திற்கேற்ப மாறியது.
TN Job “FB Group” Join Now
இன்றைய காலகட்டத்தில் தெருக்கூத்து என்ற ஒன்று இல்லாமலே போனது. அதனால் இந்த கலைஞர்களுக்கு வருமானம் என்பது கேள்விக்குறியாகி போனது. தற்போது வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்விற்கு இயல், இசை, நாடகம் போன்றவை வைக்கப்படுகிறது. கலைஞர்கள் இதன் மூலம் வருமானம் ஈட்டி வந்ததனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு இது விழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் கலைஞர்கள் ஒரு வருடமாகவே சிரமப்பட்டு வருகின்றனர்.
பல பெயர்களில் சிம் கார்டுகள் உபயோகம் – அரசின் புதிய வழிமுறைகள் வெளியீடு!
மேலும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுப்பததால் கூட்டம் கூடுவதை தவிர்க்க அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு நலிந்த கலைஞர்களுக்கு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக மாதம் ரூபாய் 3000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமையகத்தில் நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.