பல பெயர்களில் சிம் கார்டுகள் உபயோகம் – அரசின் புதிய வழிமுறைகள் வெளியீடு!
ஒருவர் பல பெயர்களில் சிம் கார்டுகளை வைத்து பயன்படுத்துவது குறித்து கண்டறியவும், அவர்கள் மீது புகார்களை தெரிவிக்கவும் தொலைத்தொடர்பு துறை அறிமுகப்படுத்திய புதிய வசதி குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிம் கார்டுகள்
தற்போதுள்ள காலகட்டத்தில் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அனைவரது கைகளிலும் உள்ள ஸ்மார்ட் போன்களின் மூலம் பல அரசு, வங்கி போன்ற சேவைகளும் தற்போது எளிதாகி விட்டது. அதனால் ஒருவர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே சமையல் எரிவாயு புக்கிங் துவங்கி விமான டிக்கெட் புக்கிங் வரை எளிதாக செய்து கொள்ள முடியும்.
மகாத்மா காந்தியின் கொள்ளுபேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை – தென் ஆப்ரிக்கா நீதிமன்றம் உத்தரவு!!
ஆனால் அதே நேரத்தில் செல்போன்களின் மூலம் பல நூதனமான மோசடிகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் ஒரு நபர் பல பெயரில் சிம் கார்டுகளை வைத்து கொண்டு பலரை ஏமாற்றி, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நம் பெயரை வைத்து வேறு ஒருவர் சிம் கார்டுகளை உபயோகிப்பது குறித்து தெரிந்து கொள்ள தொலைத்தொடர்பு துறை புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதற்காக அரசு அறிவித்துள்ள படி செல்போன் பயனாளர்கள் அனைவரும் tafcop.dgtelecom.gov.in என்ற போர்ட்டலுக்குள் சென்று உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உங்கள் பெயரில் உள்ள அனைத்து சிம் கார்டுகளின் செயல்பாடு குறித்த தகவல்கள் கிடைக்கும். இதில் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளை யாரேனும் உபயோகப்படுத்துவது தெரிந்தால், அது குறித்த புகார்களை இந்த இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.