2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்று வரும் நிலையில் 300 யூனிட் வரையிலும் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்:
இந்தியாவில் 2024-25 ஆம் நித்திய ஆண்டிற்கான மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கலை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்து வருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வரும் பட்ஜெட் தாக்கல் என்பதால் பொது மக்களின் மத்தியில் கடும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இலவச மின்சாரம் குறித்த முக்கிய அறிவிப்பினை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதாவது, வீட்டு மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் வரையிலும் இலவசமாக வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பினை தாக்கல் செய்துள்ளார்.