ரூ.30000 சம்பளத்தில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு – 61 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர்கள் நியமிக்க தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக குறைவான எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் கிடைத்தது. தற்போது தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணியில் 60-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடத்தில் தற்காலிக அடிப்படையில் உதவி பேராசிரியர்களை தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட உள்ளனர். இப்பணியில் மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் உள்ளது.
டிச.22 முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசுக்கு பரிந்துரை!
இப்பணியில் பணிபுரிவதற்கு மாத சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். இதில் தகுதியான நபர்கள் தோ்வு செய்யப்பட்டு சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் துறையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவா். அத்துடன் பணியின் காலம் 120 நாட்கள் ஆகும். இவ்வாறு தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட பருவம் அல்லது நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை பணியில் இருப்பார்கள். இதற்கான கல்வித்தகுதி NET / SLET அல்லது SET அல்லது Ph.D., முடித்தவராக இருத்தல் வேண்டும்
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் / திருத்தம் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!
இப்பணியில் சேருவதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை www.ide.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து வருகிற ஜனவரி 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி நோ்காணல் நடத்தி தோ்வு செய்யப்படுவா்கள்.