டிச.22 முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசுக்கு பரிந்துரை!

0
டிச.22 முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசுக்கு பரிந்துரை!
டிச.22 முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசுக்கு பரிந்துரை!
டிச.22 முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசுக்கு பரிந்துரை!

கர்நாடகா மாநிலத்தில் வரும் டிசம்பர் 22ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்து வருவதால் வருகின்ற புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மாநில கொரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு மறுவாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இப்போது கர்நாடகாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைகளை பரிந்துரைக்கும் வகையில், பெங்களூரு உட்பட ஒமிக்ரான் அடையாளம் காணப்பட்ட பிற நகரங்களில் டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை பிரிவு 144 கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் இது தவிர டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்குமாறும் அரசுக்கு TAC அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஓமிக்ரான் சூழலில், சாலைகளிலும், பொது இடங்களிலும் கட்சி ஊர்வலங்களை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், மாநிலம் முழுவதும் வழக்கமான செயல்பாடுகள், வணிகம், பப்கள், உணவகங்கள், கிளப்புகள் மற்றும் இது போன்ற நிறுவனங்களில் கடுமையான கொரோனா நடத்தையுடன் அனுமதிக்கப்படலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அந்த வகையில் அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களில் உள்ள அனைத்து சேவைப் பணியாளர்களும் முழுமையாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 72 மணிநேரத்திற்கு மேல் இல்லாத எதிர்மறை ஆர்டி-பிசிஆர் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் / திருத்தம் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!

பெங்களூரில் மட்டுமின்றி, மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை 200க்கும் மேற்பட்டோர் கூடுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இந்த பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில் கர்நாடகா மாநிலம் முழுவதும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!