தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு மறுவாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சென்னையில் 2014- 2019 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது மறுவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
வேலைவாய்ப்பு புதுப்பிப்பு:
தமிழகத்தில் அரசு வேலைப்பாகத்தில் பதிவு செய்தவர்கள் அதை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பது அவசியமாகும். தற்போது ஆன்லைன் மூலம் புதுப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் வேலை அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தே புதுப்பிக்கலாம். மேலும் கல்வித் தகுதிகளையும் பதிவு செய்யலாம். இதன் மூலம் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் / திருத்தம் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு – எளிய வழிமுறைகள் இதோ!
அதன் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் 2014 – 2019 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்கள் மார்ச் 1ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து 2014 முதல் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
கோவையின் முக்கிய பகுதிகளில் நாளை (டிச.18) மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
அதன்படி டிசம்பர் 2ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 1ம் தேதி வரை 2014 – 2019 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவே அல்லது இணையதளம் வாயிலாகவோ, பதிவஞ்சல் மூலம், விண்ணப்பம் அளித்தும் கொடுக்கப்பட்ட தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.