Wipro நிறுவனத்தில் 30,000 Freshers க்கு வேலைவாய்ப்பு – காத்திருக்கும் அதிர்ஷ்டம்!
டிஜிட்டல் துறைக்கான தேவையானது அதிகரித்து வருவதால் 30,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த விப்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஷ்ஷர்களுக்கு வேலை:
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார சரிவை கண்டது. எனவே ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிந்த பலரும் தங்களது வேலையை இழந்தனர். தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் மீண்டும் மேலெழுந்து வருவதால் ஐ.டி ஊழியர்களின் தேவை அதிகரித்து வருகிறது.
Post Office சேமிப்பு திட்டம் – 6.6% வட்டி விகிதம்! 1,500 ரூபாய் முதல் டெபாசிட்!
முன்னணி ஐ.டி நிறுவனமான விப்ரோவில் கடந்த 90 நாட்களில் மட்டும் 20% ஊழியர்கள் வேலை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விப்ரோ மட்டுமல்லாமல் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் போன்ற நிறுவனங்களில் இருந்தும் பலர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விப்ரோ நிறுவனத்தில் 2021-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 20.5% அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் டிசிஎஸ் நிறுவனத்தின் 11.9% அட்ரிஷன் விகிதமும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 20.1%, ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தில் 15.7%, காக்னிசண்ட் நிறுவனத்தில் 33% ஆகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய மாற்றம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
அட்ரிஷன் விகிதம் என்பது தொடர்ந்து ஐடி நிறுவனங்களில் இருந்தாலும், திறமைக்கான தேவை என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது என விப்ரோவின் தலைவர் சி.ஹெச்.ஆர்.ஓ செளரப் கோவில் கூறியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் துறைக்கான தேவையானது அதிகரித்து வருகிறது. எனவே விப்ரோ நிறுவனம் 2022 – 23 ம் நிதியாண்டில் 30,000 பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல ஒப்பந்தங்களை ஐடி நிறுவனங்கள் போட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.