தமிழகத்தில் 30 மணிநேரம் முழு ஊரடங்கு – இன்று முதல் அமல்!!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 10 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது 30 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பினால் அதிகமான அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைபெறவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!!
அதன்படி தமிழகத்தில் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு (இரவு 10 முதல் காலை 4 மணி வரை) மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 24) 30 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை (ஏப்ரல் 26) காலை 4 மணி வரை 30 மணி நேர ஊரடங்கு மேற்கொள்ளப்படவுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஊரடங்கின் பொழுது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து சேவை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் பொழுது மக்கள் யாரும் வெளிவராமல் இருக்க வேண்டும் என்பதால் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்கள் முழு ஊரடங்கு? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிப்பு!
அதன்படி இன்று (ஏப்ரல் 24) இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை (ஏப்ரல் 26) காலை 4 மணி வரை சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். விதியை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.