Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனமும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம்:
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்றாகும். தடையற்ற நெட்ஒர்க் சேவை மற்றும் மலிவான விலையில் பேக்கேஜ் ஆகிய பல வசதிகளை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. ஒரு மாத ரீசார்ஜ் பிளானிற்கு எப்போதும் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுப்பது வழக்கம். தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தான் முதன் முதலில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஏப்ரல் 3ம் தேதியன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்? அதிகாரிகள் விளக்கம்!
ஜியோவை தொடர்ந்து வோடாபோன் ஐடியா (Vi) நிறுவனமும் 31 மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஏர்டெல்லும் 30 நாட்கள் வேலிடிட்டி பிளானை வழங்கியுள்ளது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரண்டு பிளானை ஏர்டெல் அறிவித்துள்ளது. அதாவது 296 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடட் தொலைபேசி அழைப்பு வசதி, தினசரி 100 குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் ஒரு மாதத்திற்கு 25ஜிபி நெட் 4ஜி அதிவேக இணைய இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
310 ரூபாய்க்கான 30 நாட்கள் கொண்ட பிளானை அறிவித்துள்ளது. அதாவது 310 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி டேட்டா பெறலாம். இதுமட்டுமல்லாமல் 30 நாட்களும் அன்லிமிடெட் கால் மற்றும் தினமும் 100 SMS செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. தினசரி மொபைல் டேட்டா பயன்படுத்தி முடித்துவிட்டால் 64kbps வேகத்தில் இணைய இணைப்பு வசதியும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.