தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை – காவல்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!

0
தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை - காவல்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!
தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை – காவல்துறை விடுத்த முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த 9ம் தேதி வடமாநில தொழிலாளி ஒருவர் இயங்கும் ரயிலில் தாக்கப்பட்டார். இந்த சம்பளம் குறித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனை:

தமிழகத்தில் கடந்த 9ம் தேதி வடமாநில தொழிலாளி ஒருவர் தமிழக இளைஞரால் ஓடும் ரயிலில் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் சக பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் வடமாநில இளைஞர்களை தாக்கிய காஞ்சிபுரத்தை சேர்ந்த மகிமைதாஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாதாசாஹேப் பால்கே விருது 2023: வெற்றியாளர்களின் பட்டியல் வெளியீடு – உடனே பாருங்க!

மேலும் அந்த நபர் வீடியோ ஒன்றில் அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த வீடியோ தற்போது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள நபர் கோயம்பேடு சந்தையில் பணி புரிபவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது போன்று ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது இடங்களில் சாதி, மத, அரசியல் ரீதியான கருத்துகளை தெரிவிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!