மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலை 1 முதல் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு முதல் மூண்டு தவணைகளாக அகவிலைப்படி உயர்வு நிலுவையில் வைக்கப்பட்டு சமீபத்தில் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், 2021ம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை அகவிலைப்படி ஜூலை 1 முதல் 3% உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக மத்திய அரசு கூடுதல் நிதிச்சுமையை சந்தித்தது. இதனால் கடந்த 2020 ஜனவரி 1 முதல் மூண்டு தவணைகளாக சுமார் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய படிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.9,488.70 கோடி ரூபாய் செலவு செய்யும். ஒன்றரை ஆண்டுகளாக DA மற்றும் DR உயர்வு தொகை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு பல கோடி ரூபாய் பணத்தை சேமித்தது.
அக்.25 முதல் மாநிலம் முழுவதும் திரையரங்குகள் திறப்பு – அரசு அனுமதி!
இதனால் 11% அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் நிலுவை காலத்திற்கான உயர்வு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை அகவிலைப்படி ஜூலை 1 முதல் வழங்குவதற்கான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில், 2021 ஜூலை 1 முதல் 3% அகவிலைப்படி உயர்வு (டிஏ) மற்றும் மானிய நிவாரணம் (டிஆர்) வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை – ஊரடங்கில் அதிகரித்த சைபர் குற்றங்கள்!
புதிய ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட முடிவு நடைமுறைக்கு வரும்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட டிஏ மற்றும் டிஆர் சலுகைகள் உடன் தொடர்புடைய மற்ற சலுகைகளும் அதிகரிக்கும் என்பதால் மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.