அக்.27 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
அக்.27 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அக்.27 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அக்.27 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மருதுபாண்டியர் நினைவு தினம் அக்டோபர் 27ம் தேதியான இன்றும், தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ம் தேதியும் சிறப்பிக்கப்பட இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட சாலைகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஆட்சியர் உத்தரவு:

ஆண்டுதோறும் மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துவார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் அக்டோபர் 27ம் தேதியான இன்று மருது பாண்டியர் நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. இதேபோல், இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் முத்துராமலிங்க தேவரின் 59-வது குருபூஜை மற்றும் 114-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.4 லட்சம் வரை காப்பீடு தொகை பெறலாம்!

இதற்காக விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சிவகங்கையில் உள்ள மருது பாண்டியர்கள் மற்றும் பசும்பொன் தேவரின் நினைவிடத்திற்கு நேரில் செல்வார்கள். இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை பராமரிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இந்த தினங்களில் திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சிவகங்கையில் உள்ள நினைவிடத்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை: கடும் வீழ்ச்சியில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

இதேபோல் இராமநாதபுரம் கமுதி வட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30 அன்று தேவர் ஜெயந்தி விழா நடக்கிறது. இதனால் அக்டோபர் 29ம் தேதி மாலை 6 மணி முதல் அக்டோபர் 30ம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பசும்பொன் செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து வகை மதுபான கடைகளும் மூடப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பாதுகாப்பு படைகள் அனுப்ப உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!