SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரூ.4 லட்சம் வரை காப்பீடு தொகை பெறலாம்!
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 4 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலேயே பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு:
காப்பீடு என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. வங்கிகள் & காப்பீடு நிறுவனங்கள் மூலமும் மக்கள் தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி காப்பீடு செய்து வருகின்றனர். கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். அவசர தேவைகளுக்கு காப்பீட்டுத்தொகை சம்பந்தப்பட்ட நபருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பேருதவியாக இருந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் காசோலையுடன் விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில் மத்திய அரசின் காப்பீடு திட்டமாக பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆகிய காப்பீடு திட்டங்கள் உள்ளது. இந்த திட்டங்களில் வாடிக்கையாளர் ஆண்டுக்கு 342 ரூபாய் செலுத்த வேண்டும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்த நபர் இறந்து விட்டாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தால் ஊனமுற்றோராகி விட்டாலோ அவருக்கு 2 லட்சம் வரைக்கும் காப்பீடு தொகை கிடைக்கும். 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.
TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி!
அதேபோல பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தில் சேருபவர்கள் ரூ.4 லட்சம் வரையில் காப்பீட்டு தொகை பெறலாம். இந்த இரண்டு காப்பீட்டு திட்டங்களும் எஸ்பிஐ வங்கியில் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 4 லட்சம் வரை காப்பீடு பெறும் வசதியை வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலேயே ஆட்டோ டெபிட் முறையில் பிடிக்கப்பட்டு விடும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.