சென்னை: கடும் வீழ்ச்சியில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
பண்டிகை காலம் நெருங்கி வந்துகொண்டிருக்கும் சூழலில் ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருகிறது. இன்றைய (அக்.27) மாலை நிலவரத்திலும் ஒரு சவரன் நகை ரூ.288 வரை குறைவை கண்டுள்ளது.
மாலை விற்பனை
வழக்கமாக பண்டிகை நாட்கள், சுபமுகூர்த்த தினங்கள் அடுத்தடுத்து வந்தால் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஏனென்றால் இந்த நல்ல நாட்களில் தான் பலரும் தங்க நகைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவர் என்பதால் விற்பனை படுஜோராக இருக்கும். அதனால் நகை கடைகள் நல்ல லாபமும் ஈட்டும். ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தங்க ஆபரணங்களின் விலை சரிவை கண்டு வருகிறது.
குட்கா, பான் மசாலா விற்பனைக்கு நவ.7 முதல் தடை – மாநில அரசு அதிரடி!
பொதுவாக ஒவ்வொரு நாளும் காலை மாலை என 2 வேளைகளிலும் தங்கத்தின் விலையானது மாற்றமடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய (அக்.27) நாளுக்கான ஆபரணத் தங்கத்தின் விற்பனையானது 2 வேளைகளிலும் சரிவை கண்டு நகைப்பிரியர்களை சற்று திருப்திபடுத்தியிருக்கிறது.
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்விற்கு செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு – அனுமதி மறுப்பு!
அந்த வகையில் இன்று (அக்.27) மாலை நிலவரத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 வரை குறைந்து ஒரு சவரன் நகை ரூ.36,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.36 வரை குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வௌ்ளி ரூ.68.90 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.