திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்விற்கு செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு – அனுமதி மறுப்பு!

0
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்விற்கு செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு - அனுமதி மறுப்பு!
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்விற்கு செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு - அனுமதி மறுப்பு!
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்விற்கு செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு – அனுமதி மறுப்பு!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற நவம்பர் 9ல் நடைபெறவிருக்கும் சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர்:

தமிழகத்தில் உள்ள உலக புகழ்பெற்ற கோயில்களில் திருச்செந்தூர் முருகன் கோயிலும் ஒன்று. இந்த கோயில் தமிழ் கடவுள் என்று சொல்லக்கூடிய முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அக்.28ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நவம்பர் மாதத்தில் கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். ‘கந்தனுக்கு அரோகரா’ என்ற முழக்கம் விண்ணை பிளக்க ஆண்டுதோறும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும். அந்த 11 நாள் விழாவில் சூரசம்ஹார நிகழ்வு மற்றும் திருக்கல்யாண நிகழ்வு போன்றவை சிறப்பானவைகள் ஆகும். இந்த சூரசம்ஹார நிகழ்வில் பல கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழக அரசு போக்குவரத்து துறையில் 6,500 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப நடவடிக்கை!

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு வரும் நவ.4ம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் சூரசம்ஹாரம் நவ.9ம் தேதியும், திருக்கல்யாணம் நவ.10ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நவ.9 மற்றும் 10ம் தேதிகளில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மற்ற நாட்களில் அதாவது நவ.4 முதல் 8 வரை மற்றும் 11 முதல் 15 வரை மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!