அக்.28ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 28ம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு போக்குவரத்து துறையில் 6,500 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப நடவடிக்கை!
இதன் மூலம் மின் பயனாளர்களுக்கு பாதுகாப்பான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் விநியோகம் தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மக்கள் வேலைகளை திட்டமிடுகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (28.10.2021) வியாழக்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூர் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நர்சிங், பி.பார்ம் மருத்துவ துணை படிப்புகளுக்கு விண்ணப்பம் – நவ.8 கடைசி நாள்!
அதனால் தானாவயல், வேட்டைக்காரன் பட்டி, அரியக்குடி, கல்லுப்பட்டி, சாத்தம்பட்டி, ஊகம்பட்டி, விசயாலயன், எஸ். ஆர். பட்டணம், வரை ஆறாவயல், மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று காரைக்குடி கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.