தமிழக அரசு போக்குவரத்து துறையில் 6,500 காலிப்பணியிடங்கள் – விரைவில் நிரப்ப நடவடிக்கை!
தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 6,500 காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தீபாவளி பாண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தற்போதே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி விட்டது. இதை காரணமாக கொண்டு பல தனியார் பேருந்து நிறுவனங்கள் பயணிகளிடம் அதிக பயணக் கட்டணம் வசூலிக்க தொடங்கி விட்டன. தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல முன்பதிவு செய்வோரிடமும் தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பில் தற்போதே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நர்சிங், பி.பார்ம் மருத்துவ துணை படிப்புகளுக்கு விண்ணப்பம் – நவ.8 கடைசி நாள்!
இது குறித்து புகார்கள் வந்த நிலையில், அரசு கூடுதல் கட்டணம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆம்னி பேருந்துகள் பல மாதங்களாக ஓடாமல் இருந்ததால் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அதை சரி செய்ய பலர் பேருந்து கட்டணம் ஏற்றம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
PPF சேமிப்பில் 1% வட்டியில் கடன் – லாபம், சலுகை உள்ளிட்ட விவரங்கள் விளக்கம்!
இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், ஆம்னி பேருந்துகள் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்க கூடாது. தீபாவளி பண்டிகை நேரத்தை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பேருந்து சிறைபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அரசு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 6,500 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் கூறியுள்ளார். அரசு சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.