குட்கா, பான் மசாலா விற்பனைக்கு நவ.7 முதல் தடை – மாநில அரசு அதிரடி!
மேற்கு வங்க மாநிலத்தில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 7ம் தேதிக்கு பின் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தடை விதிப்பு:
நாடு முழுவதும் ஆங்காங்கே பல்வேறு வகையான போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்கள் அதிகளவில் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் போதைக்கு அடிமையாவதனை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களை காட்டிலும் வட மாநிலங்களில் நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நவ.1 முதல் முதலாம் ஆண்டு UG & PG மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
தற்போது சிறுவர்களும் குட்கா மற்றும் பான்மசாலா போன்றவற்றினை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குட்கா மற்றும் பான்மசாலா போன்றவை மனித உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதைப்பொருள் விற்பனையை குறைப்பதற்காகவும், சிறுவர்கள் அடிமையாவதை தடுப்பதற்காகவும் மேற்குவங்க மாநிலத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதிப்பதாக மாநில சுகாதாரத்துறை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்விற்கு செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு – அனுமதி மறுப்பு!
மேற்கு வங்க மக்களின் நலனை கருத்தில் கொண்டு குட்கா மற்றும் பான்மசாலா உற்பத்தி, விற்பனை செய்ய மற்றும் பதுக்கி வைக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த பொருட்கள் எந்த பெயரில் சந்தைகளில் விற்கப்பட்டு வந்தாலும் நவம்பர் 7 ஆம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த தடையானது அடுத்த ஓராண்டிற்கு அமலில் இருக்கும் என்று மேற்கு வங்க உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் கூறியுள்ளார்.