நவ.1 முதல் முதலாம் ஆண்டு UG & PG மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளும், நவ.15ம் தேதி முதல் முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளும் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு
நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது நோய் தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் சூழலில் கல்லூரிகளை மீண்டுமாக திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்விற்கு செல்லவிருக்கும் பக்தர்கள் கவனத்திற்கு – அனுமதி மறுப்பு!
அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் படிப்படியாக திறக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவின் படி, ‘ஒடிசா மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் அடுத்த மாதம் முதல் துவங்குகிறது.
அக்.28ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இப்போது முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு நவம்பர் 1 மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு நவம்பர் 15 முதல் வகுப்புகள் துவங்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒடிசாவில் இம்மாதம் 21ம் தேதி முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், அக்டோபர் 25ம் தேதி முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்கியது. தவிர கடந்த செப்டம்பர் மாதம் முதலே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.