10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேற்கு வங்கத்தில் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எந்தெந்த நாட்களில் எந்தெந்த வகுப்புகளுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெறும் என்பது குறித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்தததை அடுத்து மாநில அரசுகள் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு சில தளர்வுகளை அளித்தது. இந்த நேரத்தில் கல்வித்துறை மாணவர்களின் கல்வி நலன் கருதி மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புக்களை நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்டறியபட்டு ஒவ்வொரு மாநிலங்களும் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி கடைகளில் ‘செறிவூட்டப்பட்ட அரிசி’!
அதன் படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல்நிலை, நடுநிலை, தொடக்கநிலை என்று படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாம் அலை தாக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளை -பின்பற்ற அரசு அறிவுறுத்தி வருகிறது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் இந்தாண்டு பொதுத் தேர்வுகளை நடத்தவும் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி பெறாதவர்கள் பட்டியல்! முக்கிய அறிவிப்பு!
மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேற்கு வங்கத்திலும் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து முதல் கட்டமாக 9 – 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இந்த நேரத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்களும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.