இந்தியாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு போர்டு தேர்வு நடத்த இருப்பதாக அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
இந்தியாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது போக ஒவ்வொரு மாதமும் மாதத் தேர்வு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 2024-25 ஆம் கல்வியாண்டில் இருந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தேர்வெழுதும் வாய்ப்பு வழங்க உள்ளதாக கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதாவது, ஆண்டிற்கு ஒரு முறை எழுதும் பொதுத் தேர்வை மாணவர்கள் விருப்ப அடிப்படையில் இரண்டு முறை எழுதும்படியான நடைமுறையை கொண்டு வர இருப்பதாக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பள்ளிகளில் செமஸ்டர் முறையை செயல்படுத்த எந்தவித திட்டமும் இல்லை எனவும், ஆண்டிற்கு இரண்டு முறை போர்டு தேர்வு வைக்கப்படுவதால் மாணவர்களின் செயல் திறன் மேம்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு வைக்கப்படுவதால் மாணவர்களின் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளதாகவும், இரண்டாவது தேர்வில் அதிக மதிப்பெண் பெற இது தூண்டுதலாக அமையும் எனவும் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.