கொரோனாவிற்கு புதிய மருந்து 2DG – ஜூன் மத்தியில் விற்பனை!
கொரோனா வைரசுக்கு 2DG என்ற புதிய மருந்தை டிஆர்டிஓ நிறுவனம் தயாரித்துள்ளது. இது அடுத்த மாதம் மத்தியில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா சிகிக்சை மருந்து :
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்துகள் இல்லாமல் மக்கள் அதிகம் உயிரிழந்தனர். மருத்துவ ஆராச்சியாளர்கள் தொடர்ந்து சிகிக்சை மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வந்தனர். அதன் விளைவாக ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிசைக்கு பயன்படுத்தப்பட்டது. இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விற்கப்பட்டது.
ஜூன் 1க்கு பிறகு முழு ஊரடங்கில் சில தளர்வுகள் – மாநில அரசு தகவல்!!
இதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு மருந்தாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடபட்டது. புனே நிறுவனம் இதை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த மருந்தை அரசுகள் மக்களுக்கு இலவசமாக அளிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது டிஆர்டிஓ கொரோனா சிகிசைக்கு புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த மருந்தின் பெயர் 2DG. கொரோனா சிகிசைக்கு பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த 2DG மருந்தின் விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அனைவரும் வாங்க கூடிய வகையில் விலை நிர்ணயிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் இந்த மருந்து விற்பனைக்கு வரும் என டாக்டர் ரெட்டிஸ் தெரிவித்துள்ளார்.