ஜூன் 1க்கு பிறகு முழு ஊரடங்கில் சில தளர்வுகள் – மாநில அரசு தகவல்!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நாட்களை விட நோய் பாதிப்பு சற்று குறைந்து வருவதால், அம்மாநிலத்தில் மீண்டுமாக முழு ஊரடங்கை அமல்படுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 1க்கு பிறகு முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக மகாராஷ்டிராவில் நேற்று (மே 19) ஒரே நாளில் 34,031 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் 51,457 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் 401,695 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து அம்மாநிலத்தில் புதிய பாதிப்புகள் குறைவாக பதிவு செய்யப்பட்டு வருவதால், மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை நீட்டிக்க அவசியம் இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
மேலும் கொரோனாவால் அதிகம் பலியானவர்கள், புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்றும், அவர்கள் 3 அல்லது 4 வாரங்களாக சிகிச்சை எடுத்து, அபாயகரமான கட்டத்தை தாண்டி இறப்பவர்கள் தான் என டாக்டர் ராகுல் பண்டிட் தெரிவித்துள்ளார். முன்னதாக மகாராஷ்டிராவில் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆறு நாட்களாக, மகாராஷ்டிராவில் 40,000 க்கும் குறைவான புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இருந்தாலும் இறப்பு எண்ணிக்கையானது மஹாராஷ்டிராவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது மே மாதம் 19 ஆம் தேதி வரை 14,462 இறப்புகள் பதிவாகியுள்ளன. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் 12,496 என அதிகளவு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மஹாராஷ்டிராவில் இதுவரை 700,000 ஆக இருந்த புதிய பாதிப்புகள் கடந்த 25 நாட்களில் 400,000 க்கும் கீழ் குறைந்துள்ளது. ஏற்கனவே அம்மாநிலத்தில் ஜூன் 1 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காரணத்தால், அதற்கு பிறகு பொது முடக்கத்தை நீட்டிப்பது அவசியம் இல்லை என மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.