தமிழக அரசு பள்ளிகளில் 2,774 காலிப்பணியிடங்கள் – ரூ.10,000 தொகுப்பூதியம் அடிப்படையில் பணி நியமனம்!
தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு கொரோனா தாக்கத்தினால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி படிக்க வைக்க இயலவில்லை. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முன் வந்துள்ளனர். மேலும் திமுக தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதால் அரசு பள்ளிகளில் வழக்கத்தை விட மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இத்தகைய நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததால் கற்பித்தலில் சிரமம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் அனைத்து பணிகளும் தாமதமாகிறது. அதனால் மேல்நிலை பள்ளிகளில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இந்த நிலையில் மேல்நிலைப் பள்ளிகளில் முக்கிய பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு காலியாக உள்ள 2,774 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்றவர்களை மாதம் 10,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பிரிவிற்கான உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழு நியமித்து கொள்ளலாம். 5 மாத கால ஒப்பந்தம் அல்லது ஆசிரியர் தேர்வாணையத்தால் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் வரை தற்காலிகமாக நியமனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.